Oct 23 2008

நம் காதல்...!

-----------------------------------------------------------
காத்திருப்பது  கண்கள் மட்டுமல்ல, என் இதயமும்தான்.
கண்கள் தூக்கத்திற்க்காக,  நீ  கனவில் வருவாய் என
இதயம் உன் அன்பிற்காக, நீ வாசலில் வருவாய் என

------------------------------------------------------------
கடற்கரை மணலில் நம் நட்பை எழுதி வைத்தேன்
கடல் அலை வந்து எடுத்து சென்றது,
அழகான முத்துக்கள் எனக்கே சொந்தமென்று.
-----------------------------------------------------------

என் கண்ணிருக்குத்தான் எத்தனை வெட்கம்
அவர் விலகி சென்றபின்தான் வெளியில் எட்டிப்பார்கின்றது.

-----------------------------------------------------------

நீ, நான், நட்பு முவரும் ஓடிக்கொண்டு இருந்தேம்
உனக்காக நானும், எனக்காக நயும்,
விட்டுக் கொடுத்து ஓடும் போது " நட்பு"
நம்மை  வென்று விட்டது

----------------------------------

மேல் இருக்கும் இமைகளுக்கு எவ்வளவுதான் பொறாமை,
கண்  சிமிட்டாமல் உன்னை பார்க்க ஆசைப்பட்டால்.
பொறாமை உன்னைப் பார்க்கும் விழி மீதா இல்லை உன்மீதா.

------------------------------------------------------------------

இந்த உணர்வுகள் தூசியாலும், 
காற்றாலும் கலங்கப்படாத.

மனதினை கண்ணாடிப்போன்று
பிறதிபலிக்கும் பெருங்கடல்.
----------------------------------------------------------------
நான் உன்னை பார்க்கும் பொழுது
தடுமாறக்குடாது என்பதிற்காக ,
இதயத்தை இரும்பாக்கி நின்றேன் .

அதனால் தான் என்னவோ ,
ஈர்த்துவிட்டது உன் காந்த விழிகள்
---------------------------------------------------------------

கண்ணில் பதிந்த உறவுகள் மறையலாம்
ஆனால் நெஞ்சில் பதிந்த உறவுகள்
என்றும் மறைவதில்லை,
உன் உறவைப்போல!

----------------------------------------
நினைவை கொடுத்த ஆண்டவன்,
நிம்மதியை கொடுக்க மறந்து விட்டான்!
அன்பை கொடுத்த ஆண்டவன்
ஏன் அன்பானவர்களை அருகில் வைக்க மறந்து விட்டான்.

-----------------------------------------
உன் உள்ளங்கையின் உஷ்ணத்தில்
இன்னும் ஊறிக்கொண்டிருக்கிறது
என் உடல்...!

உன் கரு வட்ட விழிகளுக்கு நடுவே
சிக்கிக்கொண்டுள்ளது
என் மனது...!

உன் உதட்டு சிவப்பில் ஒட்டி,
ஒளிந்துகொண்டுள்ளது
என் வயது...!

உன் கூந்தல் முடிகளுக்கு பின்னால்
அலைந்துகொண்டிருக்கிறது
என் வாழ்க்கை...!

உன் கன்னக் குழிகளில்
புதைந்து இறந்து போகிறது
என் கோபம்...!

உன் வார்த்தைகளின் இடைவெளிகளில்
மறைந்து கொள்கிறது
என் மௌனம்...!

உன் கன்னம் கிள்ளிவிட்ட என் விரல்களில்
ஒட்டிக்கொண்டுள்ளது
நம் காதல்...!

Comments

4/10/2009 11:55:04 PM
Bharani
Bharani
Oh... edhellam kuda theriyuma ungalukku

rgds
Bharani

Add comment


(Will show your Gravatar icon)

  Country flag

biuquote
  • Comment
  • Preview
Loading