பல ஆண்டுகளாக உத்தமம் என்னும் தமிழ் இணைய குழு இருப்பது தெரிந்தும், கடந்த ஆண்டு, அக்குழுவில் ஒரு உறுப்பினராக சேர்ந்து இருக்கிறேன், அதன் மூலம், என்னுடைய பொழுதுபோக்கு அம்சமான கைபேசி தொழில் நுட்பங்களில் தமிழ் எவ்வாறு பயன்படுத்தலாம்!
தமிழர்கள் அனைவரும் தாய் மொழியான தமிழில், எப்படி கருத்துக்களை குறு செய்தியின் மூலம் பரிமாற வைக்கமுடியும் என்கிற சிந்தனையில், முடிந்த சில நேரங்களை ஒதுக்க முயற்சி செய்துகொண்டு இருக்கிறேன்.
1949 களில் , திரவிட கட்சிகளின் வரலாறாக, இ.வே.ர. பெரியார் அவர்கள் நடத்திய, முத்தமிழ் மாநாடு கோவையில் நடத்தி முடித்தார். 2010-ல் திரு கலைஞர் அவர்கள், அந்த வரலாற்றின் தொடர்ச்சியாக, உலகச் செம்மொழி மாநாட்டை தனது வாழ்நாளில் நடத்தி முடிக்க ஆசைப்பட்டு, மாநாடு நடத்தும் முயற்சியில் இறங்கி இருக்கிறார், இந்த மாநாட்டின் இணையாக தமிழ் இணையம் என்னும் எங்கள் உத்தமத்தின் மாநாடு நடக்க இருக்கிறது. திங்கள் பல இருப்பினும், ஒரு குழுமத்தின் உறுப்பினராக, என்னால் முடிந்த அளவிற்கு சுய சேவைகளை செய்வது என்று முடிவு எடுத்து இருக்கிறேன்.
[More]